ஏப்ரல் முதல் ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நடைபெறும்… பிரதமர் மோடி அறிவிப்பு..

ஏப்ரல் முதல் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெறும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிம் 99-வது பதிப்பில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “‘மன் கி பாத்’ உடனான நமது உறவு அதன் 99வது படியை எட்டியுள்ளது. பொதுவாக, 99 கடினமான கட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக கிரிக்கெட்டில், பதட்டமான தொண்ணூறுகள் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. ஆனால் அது நாட்டு மக்களின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் 99 என்றால் உத்வேகம் ஏற்படுகிறது.. 100வது எபிசோடில் உங்கள் அனைவரின் ஆலோசனைகளையும் தெரிந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பரிந்துரைகள் 100வது எபிசோடை இன்னும் மறக்க முடியாததாக ஆக்குகிறது,” என்று தெரிவித்தார்..


மேலும் பேசிய அவர் “ஒருவர் இறந்த பிறகு தனது உறுப்புகளைத் தானம் செய்தால், அது 8-9 பேருக்குப் புது வாழ்வு அளிக்கும் வாய்ப்பை உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக, நாடு முழுவதும் இதேபோன்ற கொள்கை பின்பற்றப்படுவதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில், குறைந்தபட்ச வயது வரம்பு மற்றும் அது தொடர்பான குடியுரிமை விதியை அரசு நீக்கியுள்ளது.

இப்போது, ஒரு நோயாளி எந்த மாநிலத்திற்கும் சென்று உறுப்பு தானம் செய்ய பதிவு செய்யலாம். உடல் உறுப்பு தானம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது 65 வயது வரையிலான கட்டுப்பாட்டையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் ஒரு முடிவால் பல உயிர்களை காப்பாற்ற முடியும், பல உயிர்களை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்..

மேலும் பேசிய அவர் “இப்போதெல்லாம், உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றி பேசப்படுகிறது. இந்நாட்டு மக்கள் சூரிய ஒளியுடன் சிறப்பான உறவைக் கொண்டுள்ளனர். சூரியனிடம் நாம் கொண்டிருந்த அறிவியல் பண்பையும் பண்பாட்டுப் பற்றும் வேறு எங்கும் காணப்படவில்லை. இன்று ஒவ்வொரு குடிமகனும் சூரிய சக்தியின் நன்மைகளைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று தெரிவித்தார்..

மேலும், தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள தொன்மையான தொடர்புகளை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் கூறினார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது, இது சவுராஷ்டிரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டுகால தொடர்பை புதுப்பிக்கும் என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்…

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் மார்ச் 30 வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

Sun Mar 26 , 2023
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது, இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
HEAVY RAIN 1 1024x683 1

You May Like