#திருப்பூர்: திடீரென காணாமல் போன சிறுமி.. விசாரணையில் பெற்றோருக்கு அதிர்ச்சி.!

திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர்.


இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது பற்றி திருப்பூர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்,காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை மாவட்ட பகுதி மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ரியாஸ் அகமது மற்றும் மாணவியை போலீசார் மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது ரியாஸ் அகமது, மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து , ரியாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

1newsnationuser5

Next Post

உப்பிட்டவருக்கு துரோகம்.. செய்த ஓ.பி.எஸ்.. கர்மயுத்தம் செய்யப்போகிறார்.. கலாய்த்த D.J.!

Sat Nov 5 , 2022
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். இது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து மற்றும் ஜெயலலிதாவின் அறையையும் […]
ops990 25 1511612186

You May Like