இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த பரிசோதனைக்கு சென்றபோது, அவரது இரத்த மாதிரியில் மர்மமான ஒரு ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டது. அது பொதுவான எந்தவொரு இரத்த வகைக்கும் ஒத்திருக்கவில்லை. விஞ்ஞானிகள் அதை பதிவு செய்து வைத்து விட்டனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு, 2019இல் டிஎன்ஏ வரிசைமுறை தொழில்நுட்பம் முன்னேறிய நிலையில், அந்த மாதிரியை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் ஒரு புதிய மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் முக்கியத்துவம் என்ன?
* பூமியில் அந்த இரத்த வகையை கொண்ட ஒரே நபர் அவர் மட்டுமே.
* அவருக்கு வேறு யாரிடமிருந்தும் இரத்த தானம் பெற முடியாது.
* இது மருத்துவ உலகில் மிக அரிய இரத்த வகையாக பதிவு செய்யப்பட்டது.
* “Quaddra” என்பது அவர் வசிக்கும் நகரான க்வாடலூப்பை குறிக்கிறது; “Negative” என்பது அதன் தனித்துவ ரீதியான ஆன்டிபாடி வெளிப்பாட்டைக் குறிக்கிறது.
இது ஒரு அறிவியல் அதிசயமாகத் தோன்றலாம். ஆனால் மிக அரிதான இரத்த வகையைக் கொண்டவர்களுக்கு இது வாழ்வியல் ரீதியாக மிக முக்கியமான சவாலாக இருக்கும். ஏனெனில், இரத்தமாற்றம் என்பது சரியான வகையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. பொருந்தாத இரத்தம் உயிருக்கு ஆபத்தான நோயெதிர்ப்பு எதிர்வினைகளை உருவாக்கும்.
புதிய இரத்த வகையான “குவாடா நெகட்டிவ்” ஒரு சாதாரண வகைப்பாட்டை விடக் கூடுதல் முக்கியத்துவம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஒருவித அறிவியல் நிகழ்வாக தெரிந்தாலும், இதன் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் சவாலுக்கு வழிவகுத்துள்ளது.
அரிதான அல்லது அடையாளம் காணப்படாத இரத்த வகையைக் கொண்ட நபருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, சரியாக பொருந்தாத இரத்தம் வழங்கப்படுவதாக இருந்தால், அது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்.
அத்துடன், பொருந்தாத வகை இரத்தம் செலுத்தப்படும்போது, அது கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினைகளை தூண்டும் என்பதும் மருத்துவத்தில் தெளிவாக அறியப்பட்ட உண்மை. அதனால்தான், புதிய இரத்தக் குழு அமைப்புகள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் அவசியமானது எனக் கூறப்படுகிறது.