கொளுத்தும் கோடை வெயில்..!! மின் நுகர்வில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு..!!

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் தினசரி மின்நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் தினசரி மின் நுகா்வு மாா்ச் 29ஆம் தேதி 426.44 மில்லியன் யூனிட்-ஆக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு உயா்ந்தது.

தற்போது இந்த மின்நுகர்வு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது. அதாவது, 44.08 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு நுகர்ந்துள்ளது.

இது முன்னர் (03.04.2024) தொட்ட அளவான 19413 மெகா வாட் (தேவை) மற்றும் 435.85 மில்லியன் யூனிட் (பயன்பாடு) விட அதிகம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அளவிலான மிக அதிக மின் தேவையையும் சமாளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெரும் தெரிவித்துள்ளார்.

Read More : திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

Chella

Next Post

எல்கர் பரிஷத் வழக்கு: ஷோமா சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

Fri Apr 5 , 2024
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. மகாராஷ்ட்ராவின் புனே அருகே உள்ள சிறிய கிராமமான பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி ஒன்றாம் தேதி தலித்துகளுக்கும் மராத்தா குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆங்கில இலக்கிய பேராசிரியரும், சமூக ஆர்வலருமான […]

You May Like