தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக செல்வராகவனும் நடிகராக தனுஷும் அறிமுகமாகினர். அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இடத்தினை பிடித்து கொடிக்கட்டி பறந்து வந்தனர். யார் விட்ட சாபமோ, செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில், தனுஷுக்கு விவாகரத்தாகி ஒரு வருடமாகிய நிலையில், இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியானது. அப்படி சென்றிருக்கும் போது செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபின் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு, கடவுள் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என்று கூறினார். 2ஆம் திருமணம் வேண்டாம் என்று கூறிய தனுஷே, எப்படி அதை செய்வார் என்று தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் தன் பெற்றோருக்காக 150 கோடியில் போயஸ் கார்டன் வீட்டினை பரிசாக கொடுத்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.