கவனம்..! தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைய செப்.30-ம் தேதி கடைசி நாள்…! முழு விவரம்

pension 2025

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.


தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் தகுதியுடைய ஊழியர்களும் கடைசிநேர சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் விரைவில் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கடைசி நாளுக்குப் பிறகு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற முடியாது.

மேலும், ஏற்கனவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு ஒருமுறை அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதிச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது. குறைந்தது ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பாகவோ அல்லது தன்விருப்ப ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவோ இதில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது மாறவேண்டும்.

பணியிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அபராதமாக கட்டாய ஓய்வளித்தல் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைபெறுதல் ஆகிய நிகழ்வுகளில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதி அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட நாளுக்குள் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்வார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் 2025 செப்டம்பர் 30-க்கு பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியாது.

Vignesh

Next Post

நவராத்திரி நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த சிறப்பு குணங்கள் இருக்குமாம்!. ஆளுமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Fri Sep 19 , 2025
நவராத்திரி என்பது தாய் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நேரம். இந்த நேரத்தில், பக்தர்கள் வெவ்வேறு நாட்களில் விரதம் இருந்து தேவியின் ஒன்பது வடிவங்களை வணங்குகிறார்கள். ஷரதிய நவராத்திரியின் போது உங்கள் குடும்பத்திலோ அல்லது உறவினர் வீட்டிலோ ஒரு குழந்தை பிறந்தால், அது உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அறிகுறியாக இருக்கலாம். ஷரதிய நவராத்திரியின் போது பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த நபர்கள் துர்கா தேவியின் சிறப்பு […]
navratri babies born

You May Like