அதிர்ச்சி செய்தி…! மூத்த அரசியல் தலைவர் காலமானார்…! கட்சி தலைவர்கள் இரங்கல்…!

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான சரத் யாதவ் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். அவர் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஒரு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.


75 வயதான சரத் யாதவ் மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் , ஏழு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத் யாதவ் 2018 இல் தனது சொந்தக் கட்சியான லோக்தந்திரிக் ஜனதா தளத்தைத் தொடங்கினார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

அடுத்த செக்...! மொத்தம் 6 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு...! என்ன காரணம் தெரியுமா...?

Fri Jan 13 , 2023
போலி செய்திகளை வெளியிட்டு வந்த 6 YouTube சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூ-ட்யூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப்பிரிவு முறியடித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் […]
youtube

You May Like