முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான சரத் யாதவ் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். அவர் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஒரு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.
75 வயதான சரத் யாதவ் மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் , ஏழு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத் யாதவ் 2018 இல் தனது சொந்தக் கட்சியான லோக்தந்திரிக் ஜனதா தளத்தைத் தொடங்கினார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.