வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.
2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,03,855 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) இதுவரை (2025 டிசம்பர் 8) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,096 வாக்குச் சாவடி அலுவலர்கள், 12,43,716 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,40,59,971 கணக்கெடுப்பு படிவங்கள் (99.91%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,36,44,038 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,404 படிவங்கள் (99.98%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,20,557 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இறந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள், குடிப்பெயர்ந்தவர்கள் போன்றவர்கள் என மொத்தம் 80 லட்சம் முதல் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.



