அட்டகாசம்…! பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்…! கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு…!

பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக கமிட்டி அமைத்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு.

பதிவுத்துறையில்‌ முன்னோடித்‌ திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள்‌ அடைந்து கணினிமயமாக்கலில்‌ பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத்‌ திகழ வைத்துள்ளது.


தற்போதுள்ள “ஸ்டார்‌ 2.0” திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ சேவைகளில்‌ செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின்‌ லேர்னிங்‌, பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல்‌ தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல்‌, சான்றிட்ட நகல்‌ மற்றும்‌ வில்லங்க சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில்‌ தன்னிச்சையாக தயாரித்தல்‌ முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக ரூ.32.345 கோடி செலவில்‌ “ஸ்டார்‌ 3.0” திட்டம்‌ அடுத்த ஆண்டு முதல்‌ அறிமுகப்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்திர பதிவுத்துறையில் “ஸ்டார் 3.0” திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக கமிட்டி அமைத்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Vignesh

Next Post

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது!... உச்சநீதிமன்றம்!

Mon Jul 17 , 2023
நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. போதைப்பொருள் 3 ஆண்டுகளுக்கு முன் ரபி பிரகாஷ் என்பவரை கைது செய்து கோராபுட் மாவட்டம், செமிலிகுடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ரவி பிரகாஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் […]
Supreme court

You May Like