மாணவர்களே கவனம்…! அரசு வழங்கும் உதவித்தொகை…! விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…!

மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்விஉதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.


தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இன்று மாலை வரை மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்‌ என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாநிலமே சோகம்...! பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலி...!

Mon Oct 31 , 2022
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பாலம், மாலை 6.30 மணியளவில் இடிந்து […]
images 2022 10 31T052805.430

You May Like