தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகளும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் தங்களின் பெயர்களை அனுப்ப வேண்டும். டி. ரவிச்சந்திரன், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன கட்டடம், சேப்பாக்கம், சென்னை 60005 என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.