மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! ரூ.1 லட்சம் வரை பரிசு..!! எப்படி பெறுவது..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகளும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் தங்களின் பெயர்களை அனுப்ப வேண்டும். டி. ரவிச்சந்திரன், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன கட்டடம், சேப்பாக்கம், சென்னை 60005 என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விவசாயிகளே..!! வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்திக் கொள்ளுங்கள்..!!

Fri Feb 10 , 2023
பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் முடிக்க வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் […]

You May Like