இந்த வெற்றி ஒட்டுமொத்த மானிட குலத்திற்கும் நன்மை வழங்கும் வெற்றி…..! சந்திராயன்-3 பற்றி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்…..!

இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது உங்களுடைய மகிழ்ச்சியான வார்த்தைகளுக்கு என்னுடைய நன்றி உண்மையில் சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

சந்திராயன் 3 விண்கலம் நேற்று முன்தினம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மாலை 5:47 மணியளவில் லேண்டெர் நிலவில் தரையிறங்க உள்ளது இதுவரை நிலவை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

வயதானதை மாற்றி இளமையைத் தரும் மருந்துகள் கண்டுபிடிப்பு!... ஹார்வர்ட் விஞ்ஞானிகள்!

Mon Jul 17 , 2023
மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைக்கும் வகையில் புதுவித மருந்து காக்டெய்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். “கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோல் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேர் இந்த […]
Anti

You May Like