இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது உங்களுடைய மகிழ்ச்சியான வார்த்தைகளுக்கு என்னுடைய நன்றி உண்மையில் சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
சந்திராயன் 3 விண்கலம் நேற்று முன்தினம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மாலை 5:47 மணியளவில் லேண்டெர் நிலவில் தரையிறங்க உள்ளது இதுவரை நிலவை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.