வேட்பாளர் திடீர் மரணம்… இந்த தொகுதியில் 2-ம் கட்ட தேர்தல் ஒத்திவைப்பு…!

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வானிலை இயல்பு நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிக வெப்பத்தை சமாளிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது.

அனைத்துக் கட்டங்களிலும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து பொறுப்புடனும் பெருமையுடனும் பங்காற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

Election: நாடே எதிர்பார்த்த 2-ம் கட்ட தேர்தல்...! இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை...!

Fri Apr 26 , 2024
2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர்களில் 8.08 கோடி பேர் ஆண்கள், 7.8 கோடி பேர் […]

You May Like