தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மாண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது. தலைநகர் சென்னையிலிருந்து தென்கிழக்கு இந்த புயல் ஏற்பட்டு சென்னையை நோக்கி நெருங்கி வருகின்றது.
இந்த புயலின் காரணமாக, தமிழகத்தில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. மாமல்லபுரம் அருகே இன்றிரவு இந்த புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையை கடக்கும்போது 65 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும், வட தமிழகம் மற்றும் புதுவையில் மிக, மிக பலத்த மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதற்கு நடுவில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. 396 வீரர்கள் 12 குழுக்களாக 10 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த புயல் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே மாண்டஸ் புயலின் காரணமாக, கடலோரப் பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கலாம் என்றும், பிற்பகலுக்கு மேல் விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதிக கனமழையும், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.