பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தேர்வெழுத வரும்போது மாணவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த மருத்துவ சான்றுகளின் மேல் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கூடுதல் ஆவணங்களை தேர்வெழுதிய பிறகு சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய சான்று சமர்பிக்காமல் சலுகையை மட்டும் பெற்ற தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ரூ.2 ஆயிரத்தை தாண்டினால் கட்டணமா..? புதிய அறிவிப்பை வெளியிட்ட பேடிஎம் நிறுவனம்..!!

Wed Mar 29 , 2023
இந்தியாவில் யுபிஐ வழியாக ரூ.2,000-க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தற்போது அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தேசிய பரிவர்த்தனை கழகம் யுபிஐ […]

You May Like