பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் நர்சரிப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஏசியின் கம்ப்ரசர் வெடித்ததே இந்தத் தீ […]