பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் காயமடைந்தார். அறிக்கைகளின்படி, அவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கர்நாடகாவின் மைசூரு அருகே அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதியது. பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர்களுக்கு லேசான காயம் அடைந்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன. […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அலறியடித்து ஓட்டம் விமானத்தில் தீப் பற்றி எரிந்ததும் பயணிகள் மத்தியில் பதற்றமும், பீதியும் உருவானது. இதையடுத்து, விமான ஊழியர்கள் […]

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது.  ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் […]

விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது. பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, […]

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து […]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சார்ந்தவர் விஸ்வநாதன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னிமலையில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்றுக் கொள்வதற்காக சான்ட்ரோ காரில் பயணம் செய்திருக்கிறார். இதற்கு நடுவே சென்னி மலையிலிருந்து காங்கேயம் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த டேங்கர் லாரி காங்கேயத்தை அடுத்துள்ள சிவியார்பாளையம் அருகே இன்று அதிகாலை வருகை தந்து கொண்டு இருந்த சமயத்தில், எதிர்பாராத விதத்தில் விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் […]

ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞர் அதை கவனிக்காமல் இருந்துள்ளார். பாலத்தின் மீது வேகமாக மோதி […]

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27 வயது). இவருக்கும் பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. தற்போது சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 3ம் தேதி கணவண் – மனைவி இருவரும் இரவு நேரத்தில் மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்தில் இருந்து அவர்களுடைய […]

காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி […]