அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த AN-32 விமான விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் “ அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துணை விமானி உயிர் பிழைத்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப்படை விசாரணைக்கு […]