டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் மருந்துகளின் சட்டவிரோத விற்பனையைத் தடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி, போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறார்கள் இத்தகைய போதை மருந்துகளுக்கு அடிமையாவதைத் […]