ஜப்பானின் நாகோயா நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அங்கு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நகரில் ஒரே மணி நேரத்தில் சுமார் 104 மி.மீ மழை பதிவானதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்தனர். இதனால் அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். கப்பல் கொள்கலன்களிலிருந்து தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கார்டன் பியர் […]