ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர். ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு. மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு […]
bangalore
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளை குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஈகாமர்ஸ் வர்த்தகம் […]
மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளனர். இதற்காக அவரிடம் அனுமதி பெற்று கடந்த சனிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள முதல்வரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது முதல்வர் சித்தராமையாவிற்கு வாழ்த்து தெரிவிக்க தங்க முலாம் பூசிய 4 அடி உயரத்திலான பெரியார் உருவம் தாங்கிய சமூகநீதி செங்கோல் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அவர்கள் முதல்வர் சித்தராமையா இல்லத்திற்கு சென்றுள்ளனர். அப்போது […]
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38) ஈஷா என்கின்ற ஈஸ்வரன் (33) இருவரும் ரவுடிகளாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவர்கள் மீது கொலை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வடசென்னை பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருக்கின்ற செட்டுகளில் மாமுல் வசூலிப்பது போன்ற குற்ற […]
மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் 117 பயணிகள் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாததால் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து […]
கடந்த மார்ச் 25ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு 9 மணி அளவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கும், இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களை பூங்காவுக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து தனது நண்பருடன் சேர்ந்து அந்த இளைஞரும் பெண்ணை மிரட்டி காரில் […]
திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியை தனியார் ஊழிய நிறுவனர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவைச் சார்ந்த சேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தப்ஸின் பாபியான் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுகைல் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார் […]
பெங்களூருவைச் சார்ந்த நபர் ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் காவல்துறையைச் சார்ந்தவர்களை அதிர்ச்சியளிக்க செய்திருக்கிறது. தனது மனைவி எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதாக பெங்களூரைச் சார்ந்த கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் நகரின் பசலகுடி என்ற பகுதியில் வசிக்கும் இம்ரான் கான் என்பவர் தான் இந்த விசித்திரமான புகாரை காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி ஆயிஷா […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக பரிஷத் அமைப்பினர் அங்குள்ள பப் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர், பப் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. அங்கே ஏராளமான பப்களும் இரவு நேர பார்ட்டிகளும் வாடிக்கையாக நடக்கும். நேற்று பிரிகேட் சாலையில் உள்ள பப் ஒன்றில் இரவு நேர பார்ட்டி நள்ளிரவை கடந்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வந்த பரிஷத் அமைப்பினர் அந்தப் பப்பிற்குள் […]
பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அன்னம்மாள் கூலி வேலை செய்து தனது மகனை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்கு […]