சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தொழில்நுட்பம் மற்றும் அரிய கனிமங்களை சில நாடுகள் சொந்த நலனுக்காக ஆயுதமாக்குவது பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கும் புவிசார் அரசியல் மோதல்கள் விதிவிலக்கின்றி அனைத்து நாடுகளையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுக் காட்டினார். மாநாட்டின் இரண்டாம் நாளான […]

BRICS நாடுகள் உலக மக்கள் தொகையில் சுமார் பாதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 25 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், பியூஷ் கோயல் மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் வர்த்தகத்தை அதிகரித்தல், சந்தைகளைத் திறந்துவிடுதல், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அமெரிக்காவின் […]

2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் […]

டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் தாஜ் மான் சிங் […]

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 […]

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் […]

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டுவருவதில் இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை தெரிவித்தார். ஈரான் மற்றும் பரந்த மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும் மட்டுமே ஒரே வழி என்று அவர் வலியுறுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு […]

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]