நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் பித்தோராகருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கர விபத்து நடந்தது.. இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காயமடைந்தனர். பல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் […]

சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.. ஒரு பெரிய ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய குழந்தையின் வீடியோ தான் அது. எனினும் பேருந்து ஓட்டுநரின் சாதூர்யமான செயலலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பேருந்து சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென்று ஒரு சிறுமி சாலையின் குறுக்கே ஓடினாள். இந்த […]

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து தீபிடித்து எரிந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காவேரி டிராவல்ஸ் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், காலை 3 மணி அளவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த மீது இருசக்கர வாகனம் […]

இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.  தகவல் […]

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]

கென்யாவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு கென்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது […]