மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]