உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]

