விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]
central government
அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]
கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கும், சந்தையில் கோதுமை எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லரை வர்த்தக விற்பனையாளர்கள் மற்றும் கோதுமை பதப்படுத்துபவர்களுக்கு கோதுமை கையிருப்புத் தொடர்பான வரம்புகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி, பதுக்கலைத் தடுத்து […]
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக […]
காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்தது. இதன்மூலம் கைவினைஞர்களின் மாதாந்திர […]
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி ஒருவருக்கு வீடு கட்ட 2 லட்சம் ரூபாய் மானியமாக அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும். இந்த […]
கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை […]
மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் […]
குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023-ன் ஒரு பகுதியாகயாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், பராக்ரம் திவாஸ்-‘பராக்கிரம தினம்’ கொண்டாடப்படுகிறது. டெல்லியில் 2023, ஜனவரி 23, 24 தேதிகளில் இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பழங்குடியினர் நடன விழாவான ‘ஆதி […]
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவில் பரவி வரும் BF.7 புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் முதல் […]