தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் ஃபாஸ்ட்டேக் இல்லாமல் […]

நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும். அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை […]

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், […]

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]

அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்டரீதியான அளவீட்டு விதிகளைத் திருத்தி, தனியார் நிறுவனங்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக அங்கீகரிக்க ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவிடும் கருவிகளைச் சரிபார்க்கும் பணியில் தனியார் துறையும் பங்கேற்க முடியும். இந்த முயற்சி, இந்தியாவின் […]

பசுமை எரிசக்திக்கு முக்கியமான கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் கனிமங்களின் ராயல்டி விகிதங்களை சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீசியம், கிராஃபைட், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றின் ராயல்டி விகிதத்தை பின்வருமாறு குறிப்பிட/திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் […]