மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். […]
central govt
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து மகசூல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைத்த 21 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 1,69,61,521 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2,417.43 கோடி உரிமை கோரல்கள் கணக்கிடப்பட்டதாகவும் […]
பிரதமரின் சூரிய சக்தி வீடு, இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லாமல் செய்துள்ளது. மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் […]
மருந்துகளை பரிந்துரைக்கும்போது மருத்துவர்கள் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக […]
பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]
பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற […]
ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா […]
கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, […]
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் அதிகப் பயனாளிகள் குறைந்த ஓய்வூதியத் பிரிவில் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதியத் திட்டம் 2015-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி, ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 […]
குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவு தபால்தலையை டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் நேற்று (14.12.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளையும், இதுவரை உரிய […]

