தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), “தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குதல்” குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. மேலும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு ‘ஏ+’ வகை நகரங்களிலும், ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், சூரத், புனே, ஜெய்ப்பூர், லக்னோ, கான்பூர், நாக்பூர் ஆகிய ஒன்பது ‘ஏ’ வகை நகரங்களிலும் டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு சேவையைத் தொடங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தப் […]

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு 2022 முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணி தேர்வு 2022 முடிவுகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக த்ரிஷ்டி ஐஏஎஸ் (விடிகே எடுவெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தேர்வில் 216+ […]

ஜவுளித் துறைக்கான பிஎல்ஐ திட்டம் புதிய விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 2025, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் பெருமளவிலான, உற்சாகமான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, ஜவுளித் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2025, டிசம்பர் 31 வரை திறந்திருக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை https://pli.texmin.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் […]

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், […]

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் […]

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வாக ரூ. 4144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள், மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி/மக்கள் நலன் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு 2025 அக்டோபர் 10 அன்று விடுவிக்க வேண்டிய வழக்கமான மாதாந்தரப் பகிர்வுடன் 2025, அக்டோபர் 1 அன்று ரூ. 1,01,603 கோடியை மாநில அரசுகளுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக விடுவித்துள்ளது. இதன்படி […]

பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன் தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது. ககன் தீப் சிங் […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.குங்குமப்பூவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை […]

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 […]