மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய ஊரக அமைச்சகத்தின் ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா என்ற திட்டம், கிராமப்புற […]

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டாக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் […]

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழாவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நினைவு கூறும் வகையில், எஸ்சிஓ திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் செயலாளர் நீர்ஜா சேகர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள பல்வேறு […]

ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக […]

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு […]

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் நை ரோஷ்னி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992, பிரிவு 2(சி) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதாவது, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சோராஸ்ட்ரியன் (பார்சிக்கள்) மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அனைத்து […]

குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, […]

2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார், மத்திய அரசு வருமான வரி வரம்பை உயர்த்தி, நடுத்தர வரி செலுத்துவோர் உள்ளிட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில். வரவிருக்கும் 2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய […]

ஆண்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் உட்பட 128 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த விலை திருத்தத்தில் அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலத்தின் ஆண்டிபயாடிக் ஊசிகள், வான்கோமைசின், ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சல்புடெமால், புற்றுநோய் மருந்து டிரஸ்டுஜுமாப், […]

மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் […]