பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையினர் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Central 2025

ஜவுளித் துறைக்கான பிஎல்ஐ திட்டம் புதிய விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 2025, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தொழில்துறையினரின் பெருமளவிலான, உற்சாகமான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, ஜவுளித் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2025, டிசம்பர் 31 வரை திறந்திருக்கும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை https://pli.texmin.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.விண்ணப்ப சாளரத்தை மீண்டும் திறப்பது, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான தொழில்துறை ஆர்வத்தின் நேரடி பிரதிபலிப்பாகும். இது அதிகரிக்கும் சந்தை தேவை மற்றும் உள்நாட்டு ஜவுளி உற்பத்தி மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

maha

Next Post

ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!!

Sat Oct 4 , 2025
இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கும் ரூ.1 ரூபாய் நாணயம், இந்திய நாணய அமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். எனினும், இதை உற்பத்தி செய்வதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உள்ளது என்ற தகவல் நிதி சார்ந்த சுவாரஸ்யமான சவாலை வெளிப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க இந்திய […]
Coin 2025

You May Like