மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் பல நல்ல செய்திகள் இந்த மாதமே வருகின்றன. இந்த முறை தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட உள்ளது.. ஜெட் வேகத்தில் அவர்களின் நிதி நிலையை அதிகரிக்கவும் மூன்று அற்புதமான பரிசுகளைக் கொண்டு […]
central govt
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. 19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று ஓய்வூதியச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. […]
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், தரமான உடற்பயிற்சி வசதிகள் குடிமக்களுக்கு மேலும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு அண்மையில் அறிவித்த சரக்கு மற்றும் சேவை வரி […]
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் தலைமையிலான ஒப்புதல் குழு பிரிவு, எட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்திசார் முதலீடுகள் தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES), உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடத் துறைகளில், சுமார் 800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 3,500க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்நாட்டின் பொருளாதார […]
ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான […]
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் […]
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]
தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் வேண்டும் வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்படுகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்ற அரசாக […]
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025” தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025”- ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால், செப்டம்பர் 4 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். அங்கிகார் 2025 பிரச்சாரத்தின் நோக்கமானது, நாடு முழுவதும் பிரதமரின் நகர்ப்புற […]

