சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் […]

ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 13-வது […]

தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு […]

ஆபரேஷன் சிந்தூர் பெயரை வைத்து வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் […]

டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான ‘வரைவு கையேட்டை’ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 மே 13 அன்று வெளியிட்டது. இதுகுறித்த பங்குதாரர்களின் […]

புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் […]

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு”-தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைப்பு. நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி கடந்த […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை மின்-வணிக தளங்களில் சட்டவிரோதமாகப் பட்டியலிடுதல் மற்றும் விற்பனை செய்வதைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-2025என்பதை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சட்ட நிலை குறித்து தவறாக வழிநடத்தக்கூடிய மற்றும் சட்ட அமலாக்க மற்றும் அவசரகாலச் சேவைகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடர்பு […]