மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டது. இது விரிவான பகுப்பாய்வுக்கான குறியீட்டின் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுகிறது. சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 26.5 கோடி மாணவர்கள் என பலதரப்பட்ட சூழலைக் கொண்ட […]

இந்தியக் கல்வி அமைப்பானது 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்ட சுமார் 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அமைப்பாகும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித்துறை செயல்திறனை மதிப்பிட மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு குறியீடுகளைக் கணக்கில் கொண்டு செயல்திறன் தரக் குறியீட்டை(PGI) வடிவமைத்தது. முதன்முதலில் 2017-18-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்குறியீடு, 2020-21-ம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால், […]

2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த […]

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]

12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு […]

மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]

2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரீய புரஸ்கார் தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்படும் பத்ம […]

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் அனைத்து துறைகளையும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆதாருடன் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையை கட்டாயமாக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கணினியில் பதிவு செய்தும் வருகையைக் குறிக்காத அரசுத் துறைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆதார் செயல்படுத்தப்பட்ட […]