அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை தகவலின் பேரில் 15ஆம் தேதி சில நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இயக்குநரகம் சோதனை மேற்கொண்டது. அதில் நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சோதனையில், ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான OTP களைப் பெறப் பயன்படுத்தப்படும் பல மொபைல்போன்கள், இ-வே பில்கள், போலி பில்கள், பல்வேறு […]

சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]

2023-24 (தொடர்- I) தங்கப் பத்திரங்களுக்கான மத்திய அரசின் அறிவிக்கை 2023, ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு […]

மத்திய அரசின் முடிவால் தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது […]

கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கும், சந்தையில் கோதுமை எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லரை வர்த்தக விற்பனையாளர்கள் மற்றும் கோதுமை பதப்படுத்துபவர்களுக்கு கோதுமை கையிருப்புத் தொடர்பான வரம்புகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி, பதுக்கலைத் தடுத்து […]

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, கோட்டக் மகிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனமிடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷரத் கபூர், இந்தக் கூட்டாண்மை நமது முன்னாள் படைவீரர்களுக்கு தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதோடு, […]

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன. மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் […]

அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் […]

எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நிதின் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார் கேரள கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான நிதின் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில் மத்திய அரசு அவரை நியமனம் செய்துள்ளது. தற்போது டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமையகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணிபுரியும் […]