சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல நகை கடை சார்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்று வழங்கப்பட்டது. அந்த புகாரில் எங்களுடைய நகை கடையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நந்தனம் பிரபீர் ஷேக் (38) என்பவர் நகைகளை செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் சமீபத்தில் நகைகளை செய்வதற்காக 2 கிலோ 46 கிராம் 10 மில்லி எடை […]

சென்னை கொரட்டூர் பகுதியில் சேர்ந்த 23 வயது இளம்பெண் வேலை தேடி பல பகுதிகளில் அலைந்து திரிந்து இருக்கிறார். பெரியபாளையம் பகுதியில் இவர் பலரை சந்தித்து வேலை கேட்டு இருக்கின்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மௌலி, கார்த்திக் என்ற 2 இளைஞர்களும் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது வேலை தேடி அலைவதாக தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண். பின்பு வீட்டு வேலை செய்வதற்கு பெண் தேவைப்படுகிறது என அந்த இளைஞர்கள் […]

சித்தாமூர் காவல் நிலையத்தில் தனி பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக பக்தவச்சலம் என்பவர் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இது பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் ஜமீன் என்ற ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு உள்ளானதாகவும், இதில் எதிரே வந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு […]

சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லதா என்ற பெண்மணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில் காஞ்சிபுரம் வாஞ்சிவாஞ்சேரி வள்ளலார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நளினி(48) என்பவர் என்னுடன் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அவர் தன்னுடைய கணவர் சங்கர் (54) கட்டுமான தொழில் செய்து வருவதாகவும் கீழ்கட்டளையில் கட்டுமான நிறுவனம் […]

சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் இவருடைய மகன் ராமச்சந்திரன்(36) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அவருடைய குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இத்தகைய நிலையில், காணாமல் போன ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு […]

துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றுலா விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்த அந்த பயணியின் பேட்டியை பரிசோதித்துப் பார்த்தபோது ரகசிய அறைகளின் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றிய பார்சல்கள் இருந்தனர். அந்த பார்சலில் 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ 165 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. […]

சென்னை திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இங்கே கடந்த 25ஆம் வருடம் அருணா வெங்கட்ராமன் என்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அருணா வெங்கட்ராமன் தன்னுடைய நண்பரான மந்தைவெளியைச் சேர்ந்த சௌந்தரராஜன் பெயரில் பொது அதிகார பத்திரத்தை பதிவு செய்து கொடுத்திருக்கிறார். இதற்கான முன் பணத்தை கல்யாணசுந்தரராமன் அருணா வெங்கட்ராமனுக்கு […]

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஆர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(80). இவர் அந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை வேலை பார்த்து வரும் இவருக்கு முதியோர் உதவித்தொகை சென்னை அமைந்தகரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து உதவி தொகை பெற்று ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் சரோஜா. அதேபோல இந்த மாதம் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு வந்த […]

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் […]

சென்னை செம்பியம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி வருவார் நிலப்பிரச்சனையின் காரணமாக, புகார் வழங்குவதற்காக செந்தியும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் வினோத்குமார் (32) என்பவர் புகார் தொடர்பாக விசாரித்து அந்த பெண்ணிடம் அவருடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார். பின்னர் காவலர் வினோத்குமார் தவறான நோக்கத்துடன் அந்த பெண்ணுக்கு குறுந்தகவல்களை அனுப்பி இருக்கின்றார். மேலும் […]