இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று விமானம் சென்னைக்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களை பரிசோதனை செய்ததில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 304கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி 37 லட்ச ரூபாய் மதிப்பிலான 702 கிராம் தங்கத்தையும், […]

சென்னை அசோக் நகர் சேர்ந்தவர் மதுரகவி(85) இவர் கடந்த 6ம் தேதி தன்னுடைய வீட்டிலிருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது அதில் 207 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது குறித்து குமரன் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த […]

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை தெரிந்து கொண்ட செம்பரம்பாக்கத்தைச் சார்ந்த அவருடைய காதலியும் துக்கம் தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணமும் அந்த […]

சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2️ பேர் வந்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதனை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் […]

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38) ஈஷா என்கின்ற ஈஸ்வரன் (33) இருவரும் ரவுடிகளாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவர்கள் மீது கொலை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வடசென்னை பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருக்கின்ற செட்டுகளில் மாமுல் வசூலிப்பது போன்ற குற்ற […]

சென்னை புழல் அடுத்துள்ள காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த 3ம் தேதி காலை வழக்கம் போல பூஜைகளை செய்து விட்டு காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்று விட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 4️ சவரன் தங்கத் தாலி திருடு போயிருந்தது. இது தொடர்பாக உடனடியாக புழல் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, […]

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்சமயம் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் தற்சமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை தோறும் விலங்குகளின் பராமரிப்பு […]

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரம் வழங்கப்பட்டது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரத்தை வழங்குவது இது இரண்டாவது முறையாகும். NABH மறு அங்கீகார சான்றிதழை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனரிடம் வழங்கினார். நாளை நடைபெறும் […]

அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் டி ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை அதிமுகவில் வகித்திருக்கிறார். இத்தகைய நிலையில், உடல்நல குறைவால் என்று அவர் உயிரிழந்துவிட்ட சூழ்நிலையில், அவருடைய […]

நாட்டில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது இந்த நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், இதுவரையில் வந்தே பாரத் ரயில் மீது ஆறு முறைக்கு மேல் கல்வி தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றைய தினமும் அரங்கேறி […]