தலைநகர் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது 11 மணியளவில் தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டம் மதியம் 12 10 மணி வரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து வரும் 7ம் தேதியோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. ஆகவே தற்சமயம் நடந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக […]

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்காது. மாறாக அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது என்று நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டால் நிச்சயம் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால் பலர் முன்பின் யோசிக்காமல் கெடுக்கும் சில முடிவுகளால் பல குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது குறுக்கு […]

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாடு முழுவதிலும் தொடர்வதால் மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றைய தினம் ஈரோடு, […]

சென்னை ஆலந்தூர் அடுத்துள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் 21 வது தெருவை சேர்ந்தவர் அசோகன். இவர் மாந்திரீக தொழில் செய்து வந்தார். இவருக்கு அனுஷா என்ற ஒரு மகள் இருக்கிறார். இத்தகைய நிலையில், தான் கடந்த 2021 ஆம் வருடம் அனுஷாவுக்கும் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணம் நடந்தது. ஆனாலும் திருமணம் ஆகி 26 நாட்கள் கடந்த நிலையில், கருத்து வேறுபாடு என்று தெரிவித்து இருவரும் பிரிந்து சென்று […]

சென்னை ஐஐடியில் இன்று ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை ஐஐடியின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி (ஐசி & எஸ்ஆர்) அலுவலகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ராமானுஜம் மையமும் மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து “அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை இன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் […]

தமிழகத்தில் கோடை வெப்பம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாற்று வழிமுறைகளை தேடி வெப்பத்தை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள். அதோடு தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் லேசான தூறல் மழை பெய்தது சென்னையில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, […]

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் இப்படி 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் 1ம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வரையிலான காலகட்டத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான உரிமையாளர்கள் ஊக்க தொகையை பெற்றிருக்கிறார்கள். அதன்படி 2023 24 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை […]

அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற […]

பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் […]