கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது. கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]
coimbatore
கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் லாட்ஜ் மேலாளர் […]
கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சியாமளா. இவர் தங்களது வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள கோழி நேற்று முன்தினம் முட்டை ஒன்றை இட்டது. அந்த முட்டை சாதாரணமாக காணப்படும் முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கோழி முட்டையின் அளவு : சாதாரணமாக கோழி முட்டையின் எடை 50 முதல் 55 […]
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற ஆப் மூலம் ராக்கிக்கு அறிமுகமானார். இதற்கிடையில் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்துவிட்டு துடியலூர் சாலையில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டனர். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய […]
திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]
கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில், மானிட்டர், எலக்ட்ரிக் பிரஷ், ஐ.ஓ.டி., சென்சார், பொருட்களை சுத்தம் […]
சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச்-ன் விலை ட்ரெண்ட் ஆனது, ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கிடைத்தது என்று பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுகவினர் இதை விடுவதாகவே தெரிவதில்லை, வார் ரூம் போட்டு பெரிய முதலாளிகளை மிரட்டி, அன்பளிப்பாக வாங்கிய வாட்ச்சுக்கு பில் எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி […]
தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000/- […]
கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கரப்பாடி என்ற நகரில் சிவலிங்கம் என்கிற கூலி தொழிலாளி தனது மனைவி சித்ராதேவி மற்றும் மகன் கார்த்திக்(24) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் வாகன ஓட்டுனராக இருக்கின்றார். சிவலிங்கம் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனை கண்ட கார்த்திக் கோபமடைந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த […]
கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள குனியமுத்தூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் 40 வயது நிறைந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேலை பார்த்து வருகின்றார். பெண் பேராசிரியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் கணவர் இறந்துவிட்டதால், கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை செய்கின்ற பிரதிநிதியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 2-வது மகளுக்கு […]