திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் 1,50000 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் சிலம்பரசன் ஆனால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், துரை 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆகவே சிலம்பரசன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட […]

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் ஒருவர் பட்டப் பகலில் பழிக்கு பலியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி சோரீஸ்புரம் இரண்டாவது தெருவை சார்ந்தவர் பிச்சை கண்ணன் இவரது மகன் முத்துக்குமார் வயது 45. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தங்க நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த […]

காணாமல் போன பசுவை கண்டுபிடிக்க கோரி வினோதமான முறையில் மனு அளிக்க வந்த நபரால் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டி என தனது வீட்டில்  நிறைய கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று காணாமல் போய் உள்ளது. விவசாயி கோவிந்தன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக் […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் பாளையத்தை சேர்ந்தவர் சுகதீஷ். இவரது மனைவி நளாயினி (30). இவர் நேற்று காலை தனது 4 வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.  அப்போது, ​​திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்னூரில் […]