சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ மற்றும் மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 28 பள்ளி மாணவர் விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள் என 37 மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளும், 5 கல்லூரி மாணவர்கள், 6 கல்லூரி மாணவிகள் என […]

உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் […]

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த […]

தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்பியாள் தொழிற்பிரிவுற்கு 8- ஆம் வகுப்பிலும் பொருத்துநர், குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை […]

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான […]

கல்லூரி முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள்‌ உள்ளது. இதற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள்‌ முதலாம்‌ ஆண்டில்‌ சேர்க்கப்பட்டுள்ளனர்‌. தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில்‌ மாணவர்‌ சேர்க்கை […]

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் […]

சென்னை ஐஐடியில் இன்று ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை ஐஐடியின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி (ஐசி & எஸ்ஆர்) அலுவலகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ராமானுஜம் மையமும் மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து “அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை இன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் […]

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்தால் ரூ.1000 அபராதம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பி.எட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் 3ஆவது பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 100 நாட்கள் வருகைபுரிய வேண்டும். பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் […]