fbpx

டெல்லி கலால் கொள்கை தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் விசாரணை அதிகாரியிடம் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும் ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய …

மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31ம் தேதியை முன்னிட்டு, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது. வரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.…

இலவச வேட்டி சேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை …

கர்நாடகா மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரனையும், பல்லாரி காங்கிரஸ் எம்எல்ஏவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழலுக்கு தங்களுக்கு உதவாததால் ஆணயத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு …

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திமுக அரசின் ஊழல் தொடர்பாக டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் சில ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட …

இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறும்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகனுக்கு எதிராக 10,000 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டிவிஏசி தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, …

திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜின் மகள் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊழல் குறித்து பேசும் தார்மீக உரிமை பிரதமருக்கு இல்லை என்று கூறினார். மத்திய பாஜக அரசின் ஊழல் செயல்களை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என கூறினார் ‌

பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை …

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் …

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார்.

அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த …