மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மேலும், சிரப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிமுறைகளையும் இது வழங்குகிறது. 2 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர்கள் அவர்களுக்கு இருமல் மற்றும் சளி மருந்து கொடுக்கவே […]

ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் […]