கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூரில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் போன்றோரை குறிவைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான அந்த போதை பொருள் கும்பலை சார்ந்தவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஆகவே தனிப்படை காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் தலைமுறைவாக […]

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் முன்பு செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது மதிக்க ஒரு இளம் பெண் ஐ ப்ரோ சரி செய்வதற்காக வந்துள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்வதற்காக வருகை தந்துள்ளார். அப்போது 23 வயது இளம்பெண் அங்குள்ள ஒரு இருக்கையில் முன்பக்கமாக சென்று அமர்ந்ததாக கூறப்படுகிறது. இதனைத் […]

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலியிடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் சிறிய அறை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனை கவனித்த பொதுமக்கள், உடனடியாக காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எறிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். […]

கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புளியங்குளம் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தகராறில் சந்தோஷ் என்பவரை கத்தியால் குத்தியாக சொல்லப்படுகிறது. இதில் சந்தோஷ்குமார் காயம் அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுவே தன்னை கத்தியால் குத்திய கமலேஷை பழிவாங்க சந்தோஷ திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூரில் இருந்து தீத்திபாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசு […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வாசித்து வந்தார். கடந்த 2019 ஆம் வருடம் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் இதனைத் தொடர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியே யாரிடமாவது […]

கோவை மாவட்டம் இடையார்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு சென்ற ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இதற்கு நடுவே ரேஷ்மா கர்ப்பமானதை தொடர்ந்து, அவர் தன்னுடைய தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அவருடைய தாய் வீடு கேரளாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி என்பவர் […]

கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (28) இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு பொள்ளாச்சியை அடுத்துள்ள டி கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற இவருடைய மனைவி பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இத்தகைய சூழ்நிலையில், நேற்று இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் இருக்கின்ற தன்னுடைய ஆண் […]

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் […]

கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த மோனிஷா(18) என்பவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தற்போது நர்சிங் படித்துக் கொண்டு நீட் தேர்வில் எழுத அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தார். வரும் 7ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் […]