குஜராத் மாநிலத்தில் பூபேந்திரா படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகின்றது. அங்கே இருக்கின்ற வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி என்ற பகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த கேடன் இனாம்தார், இவருடைய சகோதரர் சந்தீப் இனாம்தார். இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ வின் சகோதரரான சந்தீப் இனாம்தார் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி( 56) என்ற நபர் தச்சு வேலை பார்த்து வருகின்றார். அவருக்கு சிந்தன் மற்றும் பரத் […]
crime news
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அடவி சாமிபுரம் கிராமம் அருகே உள்ள கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட 6️ பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.இந்த சூழ்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி […]
கோயம்புத்தூர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதோடு, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் அவர்கள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். கோயமுத்தூர் மாவட்டம் கோவில் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேரையாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் […]
முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக […]
கோயமுத்தூர் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து, கோவை மாநகரில் இருக்கின்ற ரவுடிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரையில் 50க்கும் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கக்கூடிய மலைக்குடிபட்டியைச் சேர்ந்த வேலு என்பவருடைய மனைவி பழனியம்மாள் (75) இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு(42) இந்த நிலையில், பழனியம்மாள் தன்னுடைய கணவர் வேலு உயிரிழந்து விட்டதால் தன்னுடைய மகனின் வீட்டில் வாழ்ந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் தலைவலியின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மூதாட்டி பழனியம்மாள் தன்னுடைய மருமகளான […]
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை அடுத்துள்ள கண்ணுமேக்கிப் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியைச் சார்ந்த மகேஸ்வரி (30) என்ற பெண்ணின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில், கூலி வேலை பார்த்து தன்னுடைய 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்த சூழ்நிலைகள் தான் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கிடையிலான பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே […]
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை. பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் […]
சென்னை புழல் திருவிக தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பர் விஜயையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. […]
சென்னை ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பிரபல ரவுடியான இவர் தற்சமயம் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் வேலைகள் முடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று யோகேஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து அவரை […]