உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு […]

அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]

கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் […]

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் படித்து வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்தார் இருவருக்குள்ளான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த […]

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை […]

சென்னை அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(30) இவர் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த ஐந்து பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து மாரீஸ்வரனை கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். அதன் பிறகு அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இது தொடர்பான […]

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருடைய மனைவி சரண்யா இவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் திருப்பதிக்குச் சென்றனர். அதன் பிறகு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலில் கடந்த 25 ஆம் தேதி இரவு 7:20 மணி அளவில் ஏறியுள்ளனர். இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 2ம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ரமேஷ் ஏறியுள்ளார். முன்னதாக அவரது மனைவி […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலோக் என்ற நபர் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற தன்னுடைய மனைவி ஜோதியின் ஆசைக்காக இரவும், பகலுமாக உடைத்து வங்கியில் கடன் வாங்கி படிக்க வைத்தார் ஒரு வழியாக ஜோதி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு தன்னுடைய கணவரிடம் ஜோதி சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் வேறு ஒரு நபரிடம் தொடர்பில் இருப்பதும் அலோக்குக்கு தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் […]