திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி(42). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்த நிலையில், கோவையில் தங்கி அவர் வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த கணேசன்( 30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கணேசனுக்கும், உமாராணிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால் உமாராணி கோபித்துக் கொண்டு, அவருடைய சொந்த […]
crime news
சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்( 20) பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படித்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஹரிஷ்(16) என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கள் சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது ஒரு ராட்சதலை எழுந்தது. அந்த அலையானது 7 பேரையும் உள்ளே இழுத்துச் […]
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28) இவர் படப்பை பகுதியில் உள்ள ஒரு மொபைல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவருடைய உறவுக்கார பெண்ணான பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் படப்பை பகுதியின் பணிபுரிந்து வரும் பிரசாத்துக்கும், […]
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பாங்கவுரா கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த டின்ஹாபேகா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் டின்ஹாவின் மனைவி மற்ற குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆகிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட அவர், திருமண விழாவில் எப்படி நடனம் ஆடலாம்? என்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து, டின்ஹாவை அவரது சகோதரர்கள் இருவரும் சமாதானம் செய்ய […]
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன்( 55). விவசாயியான இவர், மாடுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார் இவர் நேற்று முன்தினம் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார். இது தொடர்பாக சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத […]
கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தனர். அதேபோல கேரளாவிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வந்தனர். பொதுமக்கள் முதலில் செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று இந்த நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நாள்தோறும் பேருந்து மற்றும் ரயில்களின் மூலமாக கல்லூரிகளுக்கு வருகை தருகிறார்கள். இப்படி வரும்போது தாங்கள் படிக்கும் கல்லூரி தான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாக, தேவையற்ற ரகளையில் மாணவர்கள் தொடர்ந்து, ஈடுபட்டு வருகிறார்கள். அது போது இது போன்ற வீடியோக்கள் வைரலாகி, அதனால் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டாலும் மாணவர்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், நேற்று அரக்கோணத்தில் […]
நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர்தெருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருடைய கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் வெளி மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இத்தகைய நிலையில் தான் அதிகாலையில் அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணின் […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்டோ மூலமாக […]
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாஞ்சி ( 36).தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஷ் கூலி தொழிலாளி என்று கூறப்படுகிறது இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கிழிச்சேரி பகுதியில் கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்திருக்கிறார். இத்தகைய நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இவர் கடை பகுதியில் இருக்கின்ற தெருவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை […]