கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]

பிபர்ஜாய் புயல் காரணமாக 15-ம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயல் 14-ம் தேதி காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, ஜூன் 15 அன்று நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் […]

பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு எட்டு கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மும்பைக்கு மேற்கே […]

பிப்பர்ஜோய் புயல் காரணமாக குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்பர்ஜோய் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, புயல் காரணமாக கடல் பகுதிகளில் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் உள்ள வல்சாத் நகரின் தித்தால் கடற்கரை ஜூன் 14 வரை […]

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய “மோக்கா” புயலானது 11-ம் தேதி மாலை 5.30 மணி அளவில்‌ தீவிர புயலாக வலுப்பெற்று வடக்குத்‌ திசையில்‌ நகர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில்‌ மிகத்தீவிரப்‌ புயலாக மத்திய மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ போர்ட்‌ பிளேயரில்‌ இருந்து சுமார்‌ 530 கிலோ மீட்டர்‌ மேற்கு -வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இதுவடக்கு – வடகிழக்குத்‌ […]

எப்போதும் கோடை காலமான சித்திரை மாதத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், பகல் சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் கூட மாலை சமயத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது. இத்தகைய நிலையில், மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிறைவு பெறுவதால் இன்னும் 2 தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது அல்லது கனமழை தமிழகத்தில் பெய்யக்கூடும் […]

தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்குத்‌ திசை காற்றும்‌, மேற்குத்‌ திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. 8-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதியில்‌நிலவிய காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதிநேற்று காலை 05:30 மணி அளவில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாகவலுப்பெற்று அதே இடத்தில்‌நிலைகொண்டுள்ளது. நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்‌ வலுப்பெற்று,இன்று தென்கிழக்கு மற்றும்‌ அதனை […]

வங்கக்கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ நாளை புயல் உருவாகும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, ”வட தமிழக கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்குச்‌ சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வுப்‌பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும்‌ அதனை […]

சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன்‌ காரணமாக அப்பகுதிகளில்‌ இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்‌கூடும்‌.இது நாளை […]

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்‌ மாதம்‌ உருவான மாண்டஸ்‌ புயல்‌ காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும்‌ இயந்திரங்கள்‌ சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து. அதனடிப்படையில்‌ சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும்‌ இயந்திரங்களுக்கும்‌ நிவாரணம்‌ வழங்க […]