கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூருவிலிருந்து சில குடும்பங்கள் ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அதில் 15 வயதான சிறுமி சுமிதாவின் குடும்பமும் ஒன்று. பெற்றோருடன் வந்த சுமிதா, கோவிலின் வழிபாடுகளை முடித்துவிட்ட நிலையில் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்த நிலையில், கடல் சீற்றத்தின் தீவிரத்தை அறியாமல் அனைவருமே கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை சுமிதாவை அடித்து உள்ளே இழுத்துச் சென்றது. வேகமாக […]

பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ராஜேந்திரன், தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான காளைகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட போட்டியில் வாடிவாசலில் காத்திருந்த […]

பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென […]

கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் ஒருவர் மற்றொருவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் சாலையில் இருந்த நபர் சோஹில் சுபேதார் சிங், தனியார் பள்ளியில் ஓட்டுநர் என்றும், அவர் தூக்கிச் சென்ற நபர் ரமேஷ்சந்திர உபாத்யாய் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ரமேஷ் சந்திர உபாத்யாய் தனியார் பள்ளியில் […]

ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள நாவலப்பிட்டியில் குமார தேசிய பாடசாலையில் 10 ஆம் வகுப்பு பயிலும் தேவிந்திர என்ற 15 வயது மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.  நேற்றைய தினத்தில் மதியம் நாவலப்பிட்டியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தேவிந்திர, தனது வீட்டிற்கு அருகே பேருந்திலிருந்து இறங்க முற்பட்டுள்ளார்.  இந்த நிலையில் கால் தடுமாறி தவறி விழுந்துள்ளார். […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம்.  இந்த நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் […]

சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார்.  பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜகோபாலபுரத்தில் குருசாமி எனபவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நெல் சாகுபடி செய்து வருகின்றார். இவருக்கு இருமகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில் தீராத குடிப்பழக்கத்திற்கு அடிமையான குருசாமி, தினமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவியின் மீது நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரைத் தினமும் தாக்கி வந்துள்ளார்.  இதனை கண்ட அவரது மகன்கள் ராஜேந்திரன்(23) மற்றும் ராம்குமார் ஆகிய […]

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்களில், டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் மம்தா தேவி மற்றும் அர்மான் கான் என்பவருக்கு இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.  இதற்கிடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அர்மான் கானுடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். ஆனால், அர்மான் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஜனவரி 14ஆம் தேதி […]

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வனராஜ் (50) எனபவர் வசித்து வருகிறார். இவர் இரண்டாவது திருமணமாக ஏசுராணி (எ) உமா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஏசுராணியின் இரண்டாவது கணவர் வனராஜ். இருவரும் முதல் திருமணத்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி கான்சாபுரம் அத்திகோவில் […]