டெல்லி மாநகர பகுதியில் உள்ள முசோரியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர்.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள மெட்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி வசந்தியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு யுகந்திகா என்ற 7 வயது மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர்.  மகள் மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று இரவில் வீட்டில் யுகந்திகா விளையாடி கொண்டிருந்த போது கையில் சால்வை துணி ஒன்றை வைத்த கொண்டு […]

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள ஒரநந்தபாடி கிராமத்தில் பழனி என்பவர் தனது மனைவி வள்ளியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.பழனி தினந்தோறும் கூலி வேலை செய்து குடும்பத்தை கவணித்து வருகிறார். தம்பதிகளுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தம்பதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்கவே ஆத்திரத்தில் இருந்த பழனி தனது மனைவி மற்றும் குழந்தைகள் […]

மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் ஒன்று அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கவுதமபேட்டையில்  அண்ணாமலையின் மகன் முகேஷ்வரன்(21) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது‌. இதனையொட்டி நண்பர் அஜய்பாலா, விஜய் பிரசாந்த் ஆகியோருக்கு நேற்று முந்தைய தினத்தில் முகேஷ்வரன் மது விருந்து வைத்துள்ளார். மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பூங்காவில் நள்ளிரவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.  இதனிடையில் முகேஷ்வரன் மற்றும் விஜய் பிரசாந்த் இடையே […]

குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொண்டு வந்த பையினை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கு வந்த […]

கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது அங்கு திடீரென்று வந்த ரயிலால் […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள காட்டூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தை எப்படி […]

தமிழ் சினிமா திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்களில் சிவ நாராயண மூர்த்தி என்பவரும் ஒருவர். இவரது எதார்த்த நடிப்பில் தனக்கென தனியிடத்தை பிடுத்து காமெடி நடிகராகவும் வலம் வந்தவர். இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். விசுவின் பூந்தோட்டம் என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இதுவரை 218-க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் விவேக் மற்றும் வடிவேலு போன்ற பல […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திண்டமங்கலத்தில் சின்னப்பன் தனது மகள் கோமதியுடன் வசித்து வருகிறார். மகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார் . இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.  இதன் காரணமாகவை தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையில் சுரேஷ் மனைவியிடம் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோமதி […]