சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், […]

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில், நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து என டாக்டர் முர்ஹேகர் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் […]

தமிழகத்தில் வரதட்சிணை அழுத்தங்களால் புதுமணப் பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பன்னீருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் 5 சவரன் நகை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 4 சவரன்தான் வழங்கப்பட்டதையடுத்து மீதமுள்ள 1 சவரனை வாங்கி வருமாறு புதிய மனைவிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தை தாங்க […]

தெலுங்கானாவின் சங்காரெட்டியில் உள்ள சிகாச்சி குளோரோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு […]

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் […]

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]

பூந்தமல்லியில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சென்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட […]

சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]